பதிவு செய்த நாள்
31
அக்
2016
05:10
பழநி: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் சுவாமிகளுக்கு காப்புகட்டுதல் நடந்தது. பக்தர்களும் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவங்கியுள்ளனர்.
மூன்றாம் படைவீடான பழநியில் அக்.,31 முதல் நவ.,6 வரை கந்த சஷ்டிவிழா நடக்கிறது. விழாவில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது. அதேநேரத்தில் பக்தர்களும் தங்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவங்கியுள்ளனர். இதைப்போலவே திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களிலும் முருகப் பெருமானை வழிப்பட்டு ஏராளமான பக்தர்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் நவ.,5ல், திருக்கல்யாணம் நவ.,6ல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.