Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவொற்றியூர் பிரம்ம தீர்த்த குளம் ... காஞ்சி ராமானுஜர் கோவில் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி திருவிழா - காப்பு கட்டுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2016
12:11

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. கோயிலில் காலை 8:30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜைகள் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன.

சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு காப்பு கட்டப்பட்டு பின்பு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சார்யார்கள் காப்பு கட்டினர். காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் ஆறு நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். உச்சிகால பூஜை முடிந்தபின்பு அவர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவும், பாலும் கோயில் சார்பில் வழங்கப்படும்.

சூரசம்ஹாரம்: தினம் இரவு ஏழு மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள் பாலிப்பார். தினம் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 11:00 மணி மற்றும் மாலை 5:00 மணிக்கும் சண்முகார்ச்சனை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 4ல் கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல், நவ. 5ல் சூரசம்ஹாரம், நவ. 6 காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி ரத வீதிகள், கிரிவீதியில் தேரோட்டம், மாலை 3:00 மணிக்கு மூலவர் முன் தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை தரிசனம் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar