பதிவு செய்த நாள்
04
நவ
2016
12:11
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு தினமும் காலை யாகசாலை பூஜை நடக்கிறது. சஷ்டியை முன்னிட்டு அக்.,31 முதல் யாகசாலையில் சுவாமிக்கு தங்க குடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனிதநீர் நிரப்பி வைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனை நடக்கிறது. நவ.,6 காலையில் சண்முகருக்கு தங்க குடத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும். நவ.,4ல் கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்கும் நிகழ்ச்சி, நவ., 5 மாலை சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹார லீலை, நவ., 6 காலை தேரோட்டம் நடக்கிறது. கோயிலில் விரதமிருக்கும் பக்தர்கள், மாவிளக்கு வைத்து சஷ்டி விரதத்தை முடிப்பர். மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு தைல புண்ணியாகவாசனமாகி, தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை நைவே தன தரிசனம் நடக்கும்.