பதிவு செய்த நாள்
09
நவ
2016
12:11
ராசிபுரம்: பட்டணம் அருகே, நர்த்தன விநாயகருக்கு பிரதிஷ்டை மற்றும் அபிஷேக விழா நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, பட்டணம் பொன்மலையில் உள்ள நர்த்தன விநாயகருக்கு பிரதிஷ்டை மற்றும் கலச புனித நீர் அபிஷேக விழா, வரும், 11ல் நடக்கிறது. முன்னதாக, 10ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கும் விழாவில், இரவு, 9:00 மணிக்கு முதல் கால யாக பூஜையில் கணபதி ஹோமம் வளர்க்கப்படுகிறது. இரவு, 11:00 மணிக்கு நர்த்தன விநாயகர் பிரதிஷ்டை நடக்கிறது. மறுநாள், அதிகாலை, 2:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 5:00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, 6:00 மணிக்கு யாக சாலையில் இருந்து, மகா கலச புறப்பாடு நடந்து, புனித கலச நீர் அபிஷேகம் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.