ஞானத்தால் வரும் சுகம் நிரந்தரமானது சுவாமி சிவயோகானந்த மகராஜ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2016 12:11
மதுரை, மதுரை சின்மயா மிஷன் சார்பில் சொக்கிகுளம் ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் பகவத்கீதை பக்தி சொற்பொழிவு நடக்கிறது.சுவாமி சிவயோகானந்த மகராஜ் பேசியதாவது: சுகத்தை எதிர்பார்த்தே மனிதன் எந்தவொரு செயலிலும் ஈடுபடுகிறான். உலகப் பொருட்களினால் கிடைக்கும் சுகம் தற்காலிகமானது. ஞானத்தால் வரும் சுகம் நிரந்தரமானது. ”வீழ்நாள் படாமை நன்றாற்றின் அக்தொருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல்,” என்கிறார் வள்ளுவர். தர்ம வழியில் நடக்கும் ஒருவனுக்கு அந்த தர்மமே அவனுடைய பிறவிப்பிணியை தீர்க்கும் மருந்தாகும் என்பது இதன் பொருள். தர்மம் என்பது எல்லோரையும் ஒன்றுபடுத்துவது. வரையறையற்ற அன்பின் வடிவானது. இந்த ஆத்மஞானத்தை உடையவர்கள் வேற்றுமை பாராட்டாமல் ஒற்றுமையை வளர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இந்த தர்மத்தில் நிலைபெற முதலில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை அற்றவர்கள் இந்த ஞானத்தை அடைய முடியாமல் மீண்டும் மீண்டும் இந்த பிறவிச்சுழலில் வீழ்கிறார்கள். துன்பத்தைக்கூட இன்பமாக கருதும் பக்குவத்தை நம்பிக்கை வழங்குகிறது. மனப்பதற்றத்தை நீக்குகிறது. பயத்தையும் பலவீனத்தையும் போக்குகிறது. மனித இயல்பைக் கடந்து ஒருவனுக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிக்கொணர்கிறது என்றார். இந்நிகழ்ச்சி இன்றும், நாளையும் மாலை 6:45 மணிக்கு நடக்கிறது.