திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கார்த்திகை திருவிழாவிற்காக டெரகோட்டா(களி மண்ணால்) வண்ண விளக்குகள் அதிகளவில் தயாராகி வருகின்றன. இது கார்த்திகை திருவிழாவிற்காகவே தயாராகும் இவ் விளக்குகள் பல வண்ணங்களில தயார் செய்யப்படுகிறது. இதில் பிள்ளையார், லட்சுமி, யானை முக விளக்கு, மயில், அன்னம், மேஜிக் விளக்கு, தேங்காய் விளக்கு, அணையா விளக்கு, பாவை, தாமரை மற்றும் அம்பாரி விளக்குகள் என பல 50க்கும் மேற்பட்ட வகை வகையான விளக்குகள் பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு விளக்கு ஒரு ரூபாய் முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் கேரளா, ஆந்திர வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தயாரிப்பாளர் கஜேந்திரன் கூறியதாவது: கார்த்திகை திருவிழாவிற்காக விதவிதமான வண்ண விளக்குகளை 2 மாதமாக தயாரித்து வருகிறோம். இதற்காக 300 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.டெரகோட்டாவில் வழக்கமாக அதிகளவு உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைப்போம். இதற்காக இந்தாண்டும் ஏராளமானோர் ஆர்டர் கொடுத்துள்ளனர். அதற்கு தகுந்த மாதிரி உற்பத்தி செய்கிறோம், என்றார்.