சபரிமலை: சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் காணிக்கை போட சில்லறை இல்லாமல் சிரமப்படுவதை தவிர்க்க இ -காணிக்கை வசதியை தேவசம்போர்டு அறிமுகம் செய்துள்ளது.இதற்காக சன்னிதானத்தின் இடது புறம் சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டு ஸ்வைப்பிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் தொகையை காணிக்கையாக செலுத்தலாம். டெபிட் கார்டு மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாயும், கிரெடிட் கார்டு பயன்படுத்தி குறைந்த பட்சம் ஒரு ரூபாயும் காணிக்கையாக செலுத்தலாம். அனைத்து பேங்குகளின் கார்டுகளையும் இங்கு பயன்படுத்தலாம். இவ்வாறு காணிக்கை செலுத்தும் போது கிடைக்கும் இரண்டு சிலிப்புகளில் ஒன்றை அதனருகே இருக்கும் உண்டியலில் போடவேண்டும். கோயில் நடை திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே இ- காணிக்கை செலுத்த முடியும். இவ் வசதியைதேவசம் போர்டுடன் இணைந்து தனலெட்சுமி பேங்க் இதை ஏற்படுத்தியுள்ளது.