Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை ஐயப்பனுக்கு இ.காணிக்கை ... சிலைமலைப்பட்டி மண்ணெடுத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பராஜபுரம் கோவிலில் அகழாய்வு செய்யப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
12:11

கம்பராஜபுரத்தில் கவனிப்பாரற்று கிடக்கும் கோவிலை, அகழ்வாராய்ச்சி செய்தால், பல வரலாற்று தகவல்கள் கிடைக்க கூடும், என, தொல்லியல் அறிஞர், ஸ்ரீதரன் தெரிவித்தார். தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன் கூறியதாவது: சென்னை - சித்துார் சாலையில், ராணிப்பேட்டைக்கு அருகில், நீவா நதிக்கரையில், திருவல்லம் உள்ளது. பாடல் பெற்ற இத்தலத்தில், பல்லவ, சோழர்களின் கல்வெட்டுகள் உள்ளன. அங்குள்ள ஒரு கல்வெட்டில், விஜயநந்தி விக்கிரமவர்மன் என்ற அரசனின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது, பல்லவர்களின் சமகாலத்தவரான, கங்க வம்ச அரசனின் பெயர். திருவல்லத்திற்கு தெற்கே, 0.5 கி.மீ., தொலைவில் கம்பராஜபுரம் உள்ளது; முன்னர், கங்கராஜபுரமாக இருந்திருக்கலாம். கம்பராஜபுரத்தில், பனந்தோப்பு என்ற பகுதியில் உள்ள விளை நிலத்தில், புதைந்த நிலையில் சிவன் கோவில் உள்ளது. அதன் சுவர்களில் மரங்கள் வளர்ந்து, சிதிலமடைந்துள்ளது. இது, கருப்பு கோவில் என, ஊர் மக்களால் அழைக்கப்படுகிறது.

இந்த கோவில், கடினமான கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளதால், இவ்வாறு அழைக்கப்படலாம். இதில், கருவறை புதைந்துள்ளதால், லிங்கம் இல்லை. உருளை வடிவ துாண்களுடன், தரங்க போதிகை கொண்ட முன்மண்டபம் உள்ளது. கோவிலுக்கு வெளியில் உள்ள, நந்தி, தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உடைந்துள்ளன. கிழக்கு, தெற்கு பகுதிகளில், வாயில்கள் உள்ளன. கருவறை உத்தரப் பகுதியில், முனிவர் வழிபடுதல், நடன மங்கை சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன. அரைத் துாணில், லிங்கத்தை வணங்கும் அடியாரின் புடைப்பு சிற்பம் உள்ளது. கருவறை தேவ கோட்டத்திற்கு மேல், வெளிச்சுவரில் மகர தோரணம் உள்ளது. அதன் நடுவே, இந்திரன் லிங்கத்தை வழிபடும் காட்சியும், அரைத் துாணில், இசைக் கலைஞர்கள், நடன மங்கை சிற்பங்களும் உள்ளன. கடந்த, 1898ல், இந்திய தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்ட இக்கோவிலில், கல்வெட்டு குறிப்பு உள்ளது. அதன்படி, விக்கிரம சோழனின் ஆட்சியில், அவன் நில தானம் வழங்கியதை அறிய முடிகிறது. தற்போது, அக் கல்வெட்டும் உடைந்து சிதறிக் கிடக்கிறது. இந்த கோவில் அமைப்பு, 9 - 10ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக உள்ளது. இதைச் சுற்றி மண்மேடு உள்ளதால், மற்ற கல்வெட்டுகளை பார்க்க முடியவில்லை. மணல், மரங்களை அகற்றி, கோவிலை அகழாய்வு செய்தால், ஒன்பதாம் நுாற்றாண்டின் வரலாற்று சான்றுகள் கிடைக்க கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச்சென்றால், அபராதம் ... மேலும்
 
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar