சிலைமலைப்பட்டி மண்ணெடுத்து சேர்த்து சேர்த்து செஞ்சது இந்த விளக்கு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2016 12:11
சிலைமலைப்பட்டி மண்ணெடுத்து சேர்த்து சேர்த்து செஞ்சது இந்த விளக்கு!பேரையூர், பேரையூர், சிலைமலைப்பட்டியில் களிமண் மூலம் கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணி நடக்கிறது.இந்த ஊரைச் சேர்ந்தவர் கோபால், 52. பல ஆண்டுகளாக களிமண் மூலம் கார்த்திகை விளக்குகள் (கிளியாஞ்சட்டி) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தவிர, அணையாவிளக்கு, கேரளா விளக்கு, பணியாரசட்டி, சப்பாத்திசட்டி, குபேந்திரன் விளக்கு உள்ளிட்டவற்றையும் தயாரிக்கிறார்.கோபால் கூறியதாவது: நான்கு தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளேன். சீசனுக்கு ஏற்றாற்போல் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். இத்தொழிலை நம்பியே குடும்பத்தை நடத்தி வருகிறேன். கார்த்திகை மாதத்தையொட்டி கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். விளக்கு செய்வதற்கு தேவையான களிமண் இப்பகுதியில் கிடைக்கிறது. தினமும் 700 விளக்குகள் வீதம் தயாரிப்பேன். ஈரத் தன்மையுள்ள விளக்குகள் வெயில் மற்றும் அடுப்பால் சூடுபடுத்தப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு விளக்கு ஒரு ரூபாய்க்கு விற்கிறேன், என்றார்.