திருப்புத்துார், திருப்புத்துார் திருத்தளிநாதர்கோவில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா நவ.,30ல் துவங்குகிறது. திருத்தளிநாதர் கோவிலில் யோக நிலையில் அமர்ந்துள்ள பைரவருக்கு கார்த்திகையில் 6 நாட்களுக்கு சம்பக சஷ்டி விழா நடைபெறும். இந்தாண்டு நவ.,30ல் துவங்கி டிச.,5ம்தேதி வரை நடைபெறும். தினசரி இருவேளைகளில் யோகபைரவர் சன்னதி முன்பாக உள்ள யாக மண்டபத்தில் காலை 9 மற்றும் மாலை 4.30 மணிக்கு அஷ்டபைரவர் யாகம் நடைபெறும். யாகம் துவங்கி பூர்ணாகுதி, அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாக் குழுவினர் செய்கின்றனர்.