விழுப்புரம்: கஞ்சனுார் ராமலிங்கேஸ்வரர் உடனுறை சவுந்திரநாயகி கோவிலில், சனி பிரதோஷம் நடந்தது. விழுப்புரம் அடுத்த கஞ்சனுார் ராமலிங்கேஸ்வரர் உடனுறை சவுந்திரநாயகி கோவிலில், சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் அம்மனுக்கு சந்தனம், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சாமி சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.