பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணங்கள், அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மல்லீஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிவராத்திரி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.