பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
நகரி: காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், ஒன்பது நாட்களில், பக்தர்கள் உண்டியலில், 32.11 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தி பகுதியில், ஞான பிரசுன்னாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிப்பர். தங்களது வேண்டுதலை, காணிக்கையாக உண்டியல்களில் பக்தர்கள் செலுத்துவர். அந்த வகையில், ஒன்பது நாட்களில் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி பிரம்மராம்பா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 32,11,205 ரூபாய் ரொக்கம், 113 கிலோ வெள்ளி, 109 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.