பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
நகரி: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியலில், 11.13 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், வடமால்பேட்டை அடுத்த, அப்பாலய குண்டாவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக, பிரதி சனிக்கிழமை திரளான பக்தர்கள் வந்து பெருமாளை வழிப்படுவர். கடந்த ஒரு மாதத்தில், உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி பவுன்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. இதில், 11,13,390 ரூபாய் ரொக்கம் இருந்தது.