பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
பெத்தநாயக்கன்பாளையம்: கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி சத்யசாயி சேவா சமிதி சார்பில், சாய்பாபா பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதில், அதிகாலை, 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் ஆகியவை நடந்தது. அதையொட்டி, 9:00 மணியளவில், இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது. அதில், 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். மதியம், 1:00 மணிக்கு அன்னதானமும், 3:00 மணிக்கு மேல், பக்தர்களை கவுரவித்தல், 91 பேருக்கு, வஸ்திர தானம் வழங்குதல் ஆகியவை நடந்தது.