பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
மோகனூர்: தொட்டிப்பட்டி ஆலமரத்து சித்தி விநாயகர் கோவிலில், வரும், 5ல் கும்பாபி?ஷக விழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த தொட்டிப்பட்டியில், ஆலமரத்து சித்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபி?ஷக விழா, வரும், டிசம்பர், 5ல் கோலாகலமாக நடக்கிறது. முன்னதாக, கணபதி ?ஹாமம், நவக்கிரக பூஜை, தீபாராதனை, பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாக பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 5ல், அதிகாலை, 4:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வேதிகார்ச்சனை, யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, கோபுரகலசத்துக்கும், ஆலமரத்து சித்தி விநாயகர், செல்லாண்டி அம்மனுக்கு மகா கும்பாபி?ஷகம் கோலாகலமாக நடக்கிறது. அதையடுத்து, சிறப்பு அலங்காரம், சுவாமி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.