பதிவு செய்த நாள்
28
நவ
2016
12:11
ஈரோடு: சபரிமலைக்கு, சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் டிச., 2, 9 தேதிகளில் காலை, 4:20 மணிக்கு ஈரோடு வருகிறது. திருப்பூர், கோவை, பாலக்காடு மார்க்கமாக கொல்லம் செல்கிறது. இதேபோல் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள் டிசம்பர், 4, 11 தேதிகளில் ஈரோடுக்கு, 00:45 மணிக்கு வருகிறது. சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை செல்கிறது. சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தால் கூட்ட நெரிசல் இன்றி சபரிமலைக்கு சென்று வர முடியும். ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பால், மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக, ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர்.