குளம் மற்றும் நதிகளில் மூழ்கி நீராடுவது உத்தமம். கிணற்றில் இருந்து நீரெடுத்து நீராடுவது மத்திமம். சமுத்திர ஸ்நானம் தினந்தோறும் செய்யக்கூடாது; பருவ காலங்களில் செய்யக் கூடியது. ஆனால், ராமேஸ்வரம் போன்ற புண்ணிய திருத்தலங்களில் எந்நாளும் நீராடலாம். நீராடும்போது, இடையில் ஒரு சிறு துணியேனும் உடுத்தியிருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.