Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீஞ்சூர் பெருமாள் கோவில் ... பரமக்குடியில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் கோயிலுக்கு திரும்பினார் பரமக்குடியில் கள்ளழகர் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 18 ம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் 18 ம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
04:04

பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி முருகனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

பழநியில் சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டறியப்பட்டது பழநி திருமஞ்சன பண்டாரம் சண்முகம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். இது குறித்து அறிய தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அவர்களிடம் வழங்கினர். செப்பேட்டு 875 கிராம் எடையும் 44 சென்டிமீட்டர் உயரம் 25 சென்டிமீட்டர் அகலம் இருந்தது. இது சிவகங்கை சீமை அரசர் விசய ரகுநாத பெரிய உடையார் தேவர், பழநி மலை முருகனுக்கு வழங்கிய பூதானம் எனும் நிலக் கொடையை பற்றி குறிப்பிடுகிறது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், "பழநியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழநிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மயில், வேல், சூரியன், சந்திரன், அரசர் உள்ளிட்ட படங்கள் வரையப்பட்டு முன் பின் என இரு பக்கங்களும் 100 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. மேலும் முசுட்டாக்குறிச்சி, பெத்தனேந்தல், தேசிகனேந்தல், நாயனேந்தல், மருகதவல்லி, சின்ன குளம் ஆறு ஊர்களை வரிகள் நீக்கி, திருக்கால சந்தியில், திருவிளக்கு, திருமாலை, அபிஷேகம் அபிஷேகம் நெய்வேத்தியம் நடைபெற கொடை அளிக்கப்பட்டுள்ளதாக உள்ளது. அரசரின் 123 பட்டங்கள் புகழுடன் பொறிக்கப்பட்டுள்ளன பின்பக்கம் 65 ஆவது வரிக்கு இடையில் தெலுங்கு மொழியில் ஆறுமுக சகாயம் என்ற பெயர் உள்ளது. இது ஆய்வுக்குரியதாகும்." என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar