உடுமலை : அகில இந்திய கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், திருப்பூர் மாவட்ட ஆலய வழிபாட்டு முறை பயிற்சி முகாம், பெதப்பம்பட்டி மூவர் கண்டியம்மன் கோவிலில் இன்று துவங்குகிறது. பயிற்சிக்கு அர்ச்சனேஸ்வரா டிரஸ்ட் தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகிக்கிறார். அனைத்து தெய்வங்களுக்கும் உரிய தியான சுலோகங்கள், ஸ்லோகம், துாபம்-தீபம்-நைவேத்யம், கற்பூர நீராஜனம், ேஷாட உபசார முறைகள், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் கற்றுத்தரப்படும். ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் விழா நிறைவில் வழங்கப்படும். இப்பயிற்சி இரண்டு நாட்களுக்கு நடக்க உள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.