Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநிகோயிலில் இன்று முதல் தினமும் ... ராமேஸ்வரம் கோயிலில் ரூ.23.92 லட்சம் உண்டியல் வசூல் ராமேஸ்வரம் கோயிலில் ரூ.23.92 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான திருமாலுகந்தான் கோட்டை சிவன் கோயில் திருப்பணிகள் மும்முரம்
எழுத்தின் அளவு:
பழமையான திருமாலுகந்தான் கோட்டை சிவன் கோயில் திருப்பணிகள் மும்முரம்

பதிவு செய்த நாள்

16 டிச
2016
11:12

சாயல்குடி: ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமைவாய்ந்த திருமாலுகந்தான் கோட்டை சிவன் கோயில் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடக்கிறது. டி.எம்.கோட்டை என்ற திருமாலுகந்தான் கோட்டையில் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த செஞ்சுடைநாதர் சமேத கருணாகடாச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பிரகார மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம், மகாமண்டபம் கருங்கற்களால் எழுப்பப்பட்டுள்ளன. இங்கு கோயிலின் ஸ்தல வரலாறு, பாண்டிய, நாயக்கர், சேதுபதி மன்னர்களின் பராக்கிரமங்கள், கொடை வழங்கிய நிலங்கள், கிராமங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய கல்வெட்டும் உள்ளது. இதில் பிராமி, வட்ட வடிவ தமிழ் எழுத்துக்கள் உள்ளன.

மூலவர் செஞ்சுடைநாதர் மூலஸ்தான விமான கலசம் கருங்கல் வார்ப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள கன்னிமூலகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதிகளில் திருப்பணி வேலைகள் பக்தர்கள், நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் துவங்கி மும்முரமாக நடக்கிறது. இதுகுறித்து கோயில் ஸ்தானிக குருக்கள் கூறுகையில்,“ திருமால் தனது அவதாரத்தில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, கருணாகடாச்சி அம்மன், சிவன் ஆகியோரது கருணையை பெற்ற ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு திருமாலுக்கு சன்னதியில்லை.  எனவே அருகில் உள்ள கொண்டுநல்லான்பட்டியில் கோயில் உள்ளது. கடலாடி, சாயல்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த பக்தர்களிடம் நன்கொடை திரட்டப்பட்டு திருப்பணிவேலைகள் நடக்கிறது. ராமநாதபுரம் சமஸ்தானம், இந்துசமய அறநிலையத்துறையின் மூலம் இன்னும் ஓராண்டிற்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோயிலில், கிருத்திகை பூஜைகள் நடந்தன.சிறுமுகை அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar