Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலுார் தபோவனத்தில் ... ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் அதிக விலைக்கு பிரசாதம் விற்பனை; அபராதம் விதித்தது தொழிலாளர் நலத்துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2016
12:12

கோவை : கோவையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, மருதமலை, மாசானியம்மன், பேரூர், ஈச்சனாரி, காரமடை கோவில்களில், பக்தர்களிடம் அதிக விலைக்கு பிரசாதம் விற்பனை செய்தது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏழாவது படைவீடாக போற்றப்படும், முருகன் கோவிலில் ஒன்றான, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், முறுக்கு, அதிரசம், லட்டு, தினைமாவு, பஞ்சாமிர்தம் ஆகிய பிரசாதங்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இவை தரமும், எடையும் குறைவாக இருந்தன.இது குறித்து பக்தர்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் முருகேசன், பிரசாதங்களை விற்பனை செய்யும் குத்தகைதாரருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார். 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குத்தகையை ஏன் ரத்து செய்யக்கூடாது? என, விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.

மருதமலை அடிவாரத்திலிருந்து மலைப்பகுதி வரை உள்ள, எட்டு கடைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேபோல், கோவை - பொள்ளாச்சி ரோட்டிலுள்ள, ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ஆனைமலை மாசானியம்மன் கோவில், காரமடை அரங்கநாத சுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

அறநிலையத் துறைக்கு அறிவுரை: இது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை சார்பில், அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், இறைவன் மீதான பக்தியால், அன்றாடம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் நம்பிக்கையை பாழ்படுத்தும் வகையில், தரமில்லாத பிரசாதத்தை வினியோகம் செய்வதோ, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்வதோ தவறு. கோவில் பிரசாதங்களை நியாயமான விலைக்கு, விற்க வேண்டும். இந்த உத்தரவை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுப்போம் என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar