குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. மூத்த குருசாமி நாச்சிமுத்து தலைமை வகித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.