Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை ... பாதுகாப்பான சபரிமலை பயணம்: ஐயப்ப பக்தர்களுக்கு டிப்ஸ் பாதுகாப்பான சபரிமலை பயணம்: ஐயப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரியங்காவில் திருக்கல்யாண விழா : மாம்பழத்துறையில் ஜோதி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
ஆரியங்காவில் திருக்கல்யாண விழா : மாம்பழத்துறையில் ஜோதி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

24 டிச
2016
11:12

ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மாம்பழத்துறையில் மணமகள் அழைப்பு ஊர்வலம் நடந்தது.இங்கு தர்மசாஸ்தா, புஷ்கலாதேவிக்கு சம்பிரதாய முறைப்படி ஜோதிரூப தரிசனம், பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த விழா, திருக்கல்யாணம், மண்டலாபிஷேகம் ஆண்டு தோறும் நடக்கிறது. சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த புஷ்கலாதேவியை மணந்து, ஆரியங்காவில் அன்னதானப் பிரபுவாக தர்மசாஸ்தா வீற்றிருக்கிறார். இதனால், சவுராஷ்டிரா சமூகத்தினரை சம்பந்தி முறையாக, திருவாங்கூர் மன்னர் வம்சத்தினர் கருதுகின்றனர். மதுரையில் செயல்படும் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மற்றும் கேரள தேவசம்போர்டு இணைந்து விழாக்களை நடத்துகின்றனர்.

ஜோதி ரூப தேவி : மாம்பழத்துறையில் பகவதி அம்மன் ரூபத்தில் வீற்றிருக்கும் புஷ்கலாதேவி, நேற்று மணமகள் அலங்காரத்தில் எழுந்தருளினார். மாம்பழத்துறை மக்கள், கோயில் தந்திரி சம்பு சர்மா, தேவசம்போர்டு ஆலோசனை குழு தலைவர் சந்திரசேகரன், செயலர் பிரகாஷ், துணை தலைவர் பாபு சார்பில் சவுராஷ்டிரா சமூகத்தினருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது; பின், பரிவட்டம் கட்டி கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். மாம்பழத்துறை ஸ்ரீபுஷ்கலா தேவி ஜோதிமய சவுராஷ்டிரா மகாஜன சங்க தலைவர் மோகன், செயலர் குப்புசாமி தலைமையில் அன்னதானம் நடந்தது. நேற்று மதியம் 1:30 மணிக்கு, புஷ்கலா தேவியை ஜோதி ரூபமாக எடுத்து வந்த தந்திரி, சவுராஷ்டிரா சங்க நிர்வாகிகள் கே.ஆர்.ராகவன், எஸ்.ஜெ.ராஜன், எஸ்.எஸ்.மோகன், எஸ்.ஜெ.கண்ணன், டி.எஸ்.ஆனந்தம் உள்ளிட்டோரிடம் வழங்கினார். ஜோதி மய ஊர்வலம் நடந்தது.

சாஸ்தாவுடன் ஐக்கியம் : ஆரியங்காவு ஊர் எல்லையில் ஜோதி மய ஊர்வலத்துக்கு, கோயில் தந்தரி ஸ்ரீராஜூ, மக்கள் சார்பில் வரவேற்பு கொடுத்தனர். அம்பாள் ஜோதி, தர்மசாஸ்தாவை வலம் வந்தது. மாலை 6:45 மணிக்கு கர்ப்பக்கிரகத்தில் சுவாமி ஜோதியுடன், அம்பாள் ஜோதி ஐக்கியமானது. பாண்டியன் முடிப்பு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் இன்று இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. சுவாமி சார்பில் திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன், அம்பாள் சார்பில் சங்கத் தலைவர் கே.ஆர்.ராகவன் பிரதிநிதியாக இருப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar