சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு; ரூ. 21.75 லட்சம் காணிக்கை வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2016 12:12
வத்திராயிருப்பு : சதுரகிரி மலை கோயிலில் நடந்த உண்டியல் திறப்பில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.21.75 லட்சம் வசூலானது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 4 முறை உண்டியல் திறப்பு நடைபெறுவது வழக்கம். ஆடி அமாவாசை பின் தற்போது 3 வது திறப்பு நடந்தது. அறநிலையத்துறை துணை ஆணையர் செல்லத்துரை, ஆய்வாளர் ராதிகா, கோயில் செயல் அலுவலர் குருஜோதி முன்னிலையில் நடந்தது. சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலில் 19.25 லட்சம், தங்கம் வெள்ளி பொருட்கள், சந்தனமகாலிங்கசுவாமி கோயிலில் ரூ. 2.50 லட்சம் என ரூ.21.75 லட்சம் வசூலானது. அவை அனைத்தும் மூடைகளாக கட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அடிவாரம் கொண்டுவரப்பட்டது.