கீழக்கரை: சேதுக்கரை சேது பந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி மாலையில் கோலாகலமாக நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. வெற்றிலை, துளசி மாலை, வெண்ணை, வடமாலை அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் ராம நாம சங்கீர்த்தனம், அனுமன் சாலீசா, சுந்தரகாண்டம் பாடி பஜனை செய்தனர். வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அதிகளவில் குவிந்தனர். ஏற்பாடுகளை ரெகுநாத பட்டர் செய்திருந்தார்.