Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆங்கில புத்தாண்டு கோலாகலம்: ... நன்றாக இருக்க வேண்டும் 2017 சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா: 1008 வடமாலை சாற்றி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
02:01

ஓசூர்: ஓசூர், ராஜகணபதி நகரில் உள்ள, வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், 1,008 வடமாலை சாற்றி, கடலைக்காய் திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜகணபதி நகரில், பிரசித்தி பெற்ற வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் கடலைக்காய் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 59வது கடலைக்காய் திருவிழா, நேற்று காலை, 5:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 9:00 மணிக்கு மங்களாரத்தி மற்றும் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, வரசித்தி ஆஞ்சநேயருக்கு, 1,008 வடமாலை சாற்றி, பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இறுதியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கடலைக்காய்களை கோவில் கோபுரம் மீது தூக்கி வீசி, ஆஞ்சநேயரை வழிபட்டனர். அத்துடன், கோபுரத்தில் மீது வீசப்பட்ட கடலைக்காயில், கீழே விழுந்தவற்றை மட்டும், பக்தர்கள் பிரசாதமாக வீடுகளுக்கு எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சொக்கலிங்கம், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar