Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் ... ஆதிபராசக்தி கோவிலில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நன்றாக இருக்க வேண்டும் 2017 சிறப்பு பிரார்த்தனையுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
02:01

ஊட்டி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி முதல், 12:00 மணிவரை, சிறப்பு நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியுடன், புத்தாண்டு துவக்கப்பட்டது. ஊட்டி புனித மோட்ச ராக்கினி தேவாலயத்தில், பங்கு குருக்கள் தலைமையில் நடந்த திருப்பலிக்கு பின், ஊட்டி மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் பங்கேற்று, மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார். பின், பிஷப் இல்லம் அருகில் புதுப்பிக்கப்பட்ட மாதா கெபி, ஆரோக்கிய அன்னையின் உருவச் சிலையை மந்திரித்து அர்ப்பணித்தார்.

ஊட்டி குருசடி, இருதய ஆண்டவர், பிங்கர்போஸ்ட் திரேசன்னை, பாய்ஸ்கம்பெனி ஆரோக்கிய அன்னை தேவாலயங்கள், குன்னுார் புனித அந்தோணியார், பேரக்ஸ் புனித ஜோசப், கோத்தகிரி ஆரோக்கிய அன்னை தேவாலயங்கள் என, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. நேற்று காலை, ஊட்டி மாரியம்மன் கோவில், காந்தள் காசி விஸ்வநாதர் கோவில், ஐயப்பன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பூஜைகள் நடத்தப்பட்டன. ஆன்மிக நினைவுகளோடு, ஒரு தரப்பு மக்கள் புத்தாண்டை வரவேற்ற நிலையில், ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல், காட்டேஜ், லாட்ஜ்களில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் உற்சாகமாயினர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா உத்தரவில், மாவட்டம் முழுக்க, சி.சி.டி.வி., கேமரா உதவியுடன், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
காட்டுமன்னார்கோவில்;  ஆதனூர் சௌந்தரநாயகி அம்பா சமேத சிவலோகநாத சுவாமி திருக்கோயில் மகா ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் வெகு விமர்சியாக ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar