பதிவு செய்த நாள்
11
ஜன
2017
12:01
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ண புரீஸ்வரர் கோவிலில், பிரதோஷம் முன்னிட்டு, சொர்ணபுரீஸ்வரர் மற்றும் நந்தி சிலைக்கு, பால், தயிர், வெண்ணெய், மஞ்சள், தேன் உள்பட, 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. மாலை, 5:00 மணியளவில், சொர்ணபுரீஸ்வரர், நந்தி பகவான், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தன.