பதிவு செய்த நாள்
16
ஜன
2017
11:01
திருவண்ணாமலை: மாட்டு பொங்கலை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு, 108 வகையான பொருட்களால் செய்யப்பட்ட மாலையால், அலங்காரம் செய்யப்பட்டது. மாட்டு பொங்கலை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவில், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவான், கோவில் கொடி மரம் அருகில் உள்ள அதிகார நந்தி ஆகியவற்றுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், ஆப்பிள், வாழை, லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, பிஸ்கட், கத்திரிக்காய், முருங்கை, அவரை, வாழைக்காய், முல்லை, மல்லி, ரோஜா, ரூபாய் நோட்டுகள் என, 108 பொருட்களால் ஆன மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நடந்த மாட வீதி உலா நிகழ்ச்சியில், பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு திருவூடல் உற்சவம் நடந்தது.