Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணும் பொங்கலையொட்டி திருத்தணி ... சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் வாழைப்பழம் சூறை சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுக்கூடலில் பார் வேட்டை திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருமுக்கூடலில் பார் வேட்டை திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
12:01

உத்திரமேரூர்: திருமுக்கூடலில், பார் வேட்டை திருவிழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருமுக்கூடலில் பிரசித்தி பெற்ற, அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம், 2ம் தேதி (மாட்டு பொங்கல் அன்று) பார் வேட்டை திருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டிற்கான விழா, நேற்று முன்தினம் நடந்தது. பார் வேட்டைக்காக காலை, 7:00 மணிக்கு, காஞ்சிபுரத்தில் இருந்து, வீதி உலாவாக புறப்பட்ட வரதராஜ பெருமாள், பழையசீவரம் மலை கோவிலுக்கு வந்து, அங்குள்ள லட்சுமி நரசிம்ம சுவாமியை சந்தித்தார். இருவருக்கும், அங்கு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனைகள் நடந்தன. அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து, வரதராஜ பெருமாள் மற்றும் லட்சுமி நரசிம்ம சுவாமிகள், நாதஸ்வரம், மேள வாத்தியம் முழங்க, பாலாற்றின் வழியாக, திருமுக்கூடலில் உள்ள அப்பன் வெங்கடேச பெருமாளை சந்தித்தனர்.

முன்னதாக, சாலவாக்கத்தில் இருந்து வந்திருந்த சீனிவாச பெருமாள், காவாந்தண்டலம் லட்சுமி நாராயண சுவாமியும், அப்பன் வெங்கடேச பெருமாள் சன்னிதியில், கோபுர வாசலில் அமர்ந்து தரிசனம் அளித்திருந்தனர். பின், ஐந்து சுவாமிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்து, தங்களுக்கான தனி, தனி இடங்களில் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பால், தயிர், பன்னீர், இளநீர், பழவகைகள் மற்றும் வாசனை திரவியங்களால், சுவாமிகளுக்கு அப்போது சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின், இரவு, 7:30 மணிக்கு, திருமுக்கூடல் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, அனைத்து சுவாமிகளும் அவரவர் இருப்பிடங்களான கோவில்களுக்கு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar