Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் பிரசாதங்களை இலையில் ... எலுமிச்சையில் விநாயகர்: வீட்டில் வைத்து பூஜை! எலுமிச்சையில் விநாயகர்: வீட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹஜ் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 அக்
2011
11:10

சென்னை:இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரையின் முதல் குழு, நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து, 165 ஆண்கள், 135 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 301 பேர், நேற்று சிறப்பாக வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, இவர்கள் செல்ல வேண்டிய விமானம் தாமதமாக வந்ததால், அனைவரும் விமான நிலையத்தில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரை, நேற்று துவங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபரைச் சேர்ந்தவர்கள், சென்னை வழியாக, இந்த ஆண்டு புனித யாத்திரை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த வகையில், தமிழகத்தில் இருந்து 3,900, புதுச்சேரியில் இருந்து 31, அந்தமானில் இருந்து 30 பேர் செல்கின்றனர். விமானம் தாமதம்: இவர்களில், முதல் கட்டமாக 165 பெண்கள், 135 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 301 பேர், நேற்று இரவு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புறப்பட்டனர். குறிப்பிட்ட இந்த விமானம், ஜெட்டாவில் இருந்து புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு சென்னை வந்தடையும். பின், 12.30 மணிக்கு ஜெட்டா புறப்படும். ஆனால், ஜெட்டாவில் விமானம் புறப்பட்டபோது, தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், இந்த விமானம் சென்னை வந்து சேர்வதில் தாமதமானது.நேற்று மாலை 6.20 மணிக்கு வந்த இந்த விமானத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருந்தவர்கள் ஏற்றப்பட்டனர். பின், இரவு 7.40 மணிக்கு, இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.உணவு ஏற்பாடு: விமானம் தாமதமாவதை அறியாமல், நேற்று காலை 10 மணி முதலே, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 250க்கும் மேற்பட்டவர்கள், விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.அவர்கள் அனைவரும், விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. விமானம் தாமதம் காரணமாக, ஹஜ் பயணிகள் அனைவரும், 7 மணி நேரம் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

வழியனுப்பு விழா: ஹஜ் புனித யாத்திரை முதல் குழுவை, இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறை செயலர் சந்தானம் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar