அங்கப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம் எது நல்ல பலனைத் தரும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2017 05:01
சாஸ்திரங்களில் அங்கப் பிரதட்சிணம் ஆண்களுக்கு என்றும், அடிப் பிரதட்சிணம் பெண்களுக்கு என்றும் வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் எக்காரணம் கொண்டும் அங்கப் பிரதட்சிணம் செய்யக் கூடாது. சில அவயங்கள் பூமியில் படக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான், த்ரயங்கம் என்று சொல்லக்கூடிய தலை, முட்டி, உள்ளங்கால் மட்டும் பூமியில் படும் வகையில் நமஸ்காரம் செய்வது. சாஷ்டாங்க நமஸ்காரம் பெண்களுக்கு விதிக்கப்படவில்லை.
அதுபோல், திருமணம் ஆன பெண்கள், முடியிறக்குதல், அதாவது மொட்டை போட்டுக் கொள்ளுவதும் கூடாது. ஆனால், இன்று ஒரு பழக்கத்தில் மொட்டை போட்டுக் கொள்கிறார்கள். இது கூடாது. அது போல் ஆண்களாக இருந்தால், பிராமணர்கள் பூணூல் போடுவதற்கு முன்னர்தான் மொட்டை போட்டுக் கொள்ள வேண்டும்; பூணூல் அணிந்த பின்னர் எக்காரணம் கொண்டு மொட்டை அடிக்கக் கூடாது. அது ஒரு தோஷம். எனவே, பெண்கள் அடிப்பிரதட்சணம்தான் செய்ய வேண்டும். ஆண்கள் மட்டுமே அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம்.