பதிவு செய்த நாள்
25
ஜன
2017
11:01
பண்ருட்டி: திருவதிகை, சரநாராயண பெருமாள் கோவிலில், வரும் 27ம் தேதி, அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் காலை 6:00 மணிக்கு, சுப்ரபாதம், 7:00 மணிக்கு, நித்யபடி பூஜை நடக்கிறது. பின், மூலவர் சரநாராயண பெருமாள், பழப்பந்தலில் பிருந்தாவன கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில், திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மாலை 6:00 மணிக்கு, நித்யபடி பூஜையும், இரவு 9:30 ஏகாந்த சேவையும் நடக்கிறது.