Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் திருவதிகை ... வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் அதிகரிப்பு வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வெளி மாநில ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரசாயன கலவை மூலம் பாரம்பரிய கலைச்சின்னம் தூய்மை
எழுத்தின் அளவு:
ரசாயன கலவை மூலம் பாரம்பரிய கலைச்சின்னம் தூய்மை

பதிவு செய்த நாள்

25 ஜன
2017
11:01

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பாரம்பரிய கலைச்சின்னங்கள், ரசாயன பூச்சு மூலம் துாய்மைப்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில், பல்லவர் கால கலைச்சிற்பங்கள் அமைந்து, சர்வதேச பாரம்பரிய பழமை கலைநகராக விளங்குகிறது.

கி.பி., 7ம் நுாற்றாண்டில், பல்லவ மன்னர்கள், கடற்கரை, கற்பாறைகள் என, அமைந்த இந்நகரில், கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சனன் தபசு, குடைவரை மண்டபங்கள் ஆகிய சிற்பக்கலைச் சின்னங்களை படைத்தனர். ஐ.நா., கலாசாரக்குழு, சர்வதேச பாரம்பரிய கலைச்சின்னங்களாக அங்கீகரித்துள்ள இவற்றை, இந்திய தொல்லியல் துறை பராமரித்து, பாதுகாத்து வருகிறது. இந்நிலையில், கடற்காற்றின் உப்புத்தன்மை, சுற்றுப்புற மாசு ஆகியவற்றால், இச்சின்னங்கள் பொலிவை இழக்கின்றன. அத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாத்து, பொலிவுடன் பராமரிக்க, இத்துறையின் ரசாயன பிரிவினர், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, ரசாயன கலவை பூச்சு மூலம் அழுக்கை நீக்கி, துாய்மைப்படுத்துகின்றனர். தற்போது, ஐந்து ரதங்கள் வளாகத்தில், இப்பணி துவக்கப்பட்டு உள்ளது.கலைச்சின்னத்தைச் சுற்றி சாரம் அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக, ரசாயன திரவக் கலவை மூலம், இச்சின்னம் கழுவப்பட்டது. அதைத்தொடர்ந்து, சுத்திகரிப்பு நீரில், காகிதம் கரைத்து தயாரிக்கப்பட்ட கூழ்மம், கலைச்சின்னத்தில் பூசப்படுகிறது. கலைச்சின்னத்தில் படிந்த அழுக்குகள், துாசு, வவ்வால் எச்சம் உள்ளிட்டவற்றை, இக்கூழ்மம் உறிஞ்சும். சில நாட்களில், கூழ்மம் நன்கு உலர்ந்து, அப்புறப்படுத்தப்படும் போது, கலைச்சின்னம் பொலிவடையும் என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar