Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கச்சபேஸ்வரர் கோவிலில் சிலைக்கு ... காளஹஸ்தி கோவில் உண்டியல் காணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தான வேணுகோபாலருக்கு பிப்., 2ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
01:01

ஆர்.கே.பேட்டை: சந்தான வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை வரும் செவ்வாய் கிழமை துவங்குகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரத்தில் அமைந்துள்ளது, சந்தான வேணுகோபால சுவாமி கோவில். பழமை வாய்ந்த இந்த கோவிலில், ஆறு மாதங்களாக புனரமைப்பு பணி நடந்தது. தற்போது, பணிகள் நிறைவடைந்த நிலையில், பிப்., 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை செவ்வாய் கிழமை துவங்குகிறது. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, 9:00 மணிக்கு, புனிதநீர் கலசங்கள் கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. 10:00 மணிக்கு, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

பாலாபிஷேகம்: வங்கனுார் கிராமத்தில் உள்ள எல்லம்மன் கோவில், 2014ல் புதிதாக கட்டப்பட்டது. நித்திய வழிபாடுகள், நவராத்திரி உற்சவம் உள்ளிட்டவை நடந்து வருகின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்து செல்கின்றனர். கும்பாபிஷேகம் நடந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, வரும், 12ம் தேதி சிறப்பு உற்சவம்
நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிப்., 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு, செவிண்டியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, 108 பால் குட ஊர்வலம் புறப்படுகிறது. 11:30 மணிக்கு, எல்லம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்படும். மாலை 3:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, பெண்கள் படையல் வைக்கின்றனர். இரவு 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா எழுந்தருளுகிறார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar