Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளஹஸ்தி கோவில் உண்டியல் காணிக்கை ... தை அமாவாசைக்கு மிளகாய் வற்றல் யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவர் கோவிலில் முன்னோருக்கு திதி தை அமாவாசையில் குவிந்தது கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
01:01

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நேற்று, தை அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோருக்கு திதி கொடுத்து, வீரராகவரை வழிபட்டனர்.

குளத்தில் நீராடல்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில், ஆண்டுக்கு இரு முறை பிரம்மோற்வம் நடைபெறுகிறது. தை அமாவாசை அன்று, சாலிஹோத்ர மகரிஷிக்கு, வீரராகவர் அருள்பாலித்த நாள், தை பிரம்மோற்சவமாக கருதப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், அமாவாசைக்கு முதல் நாள் வந்து, கோவில் வளாகத்தில் தங்கினர். காலையில், புண்ணிய குளமான ஹிருத்தாப நாசினி குளத்தில் நீராடி, தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அருள்பாலிப்பு: நேற்று காலை, 5:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மதியம், 1:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும், ஏராளமான பக்தர்கள், வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். பிரம்மோற்சவம்: தை பிரம்மோற்சவம், 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று காலை, 5:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, உற்சவர் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 4:00 மணிக்கு, நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு, 10:30 மணிக்கு யாளி வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வந்தார். நாளை காலை, 5:40 மணிக்கு, பெருமாள் தேருக்கு எழுந்தருளி, 7:30க்கு தேரோட்டம் நடைபெறும்.

திருத்தணி: முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்தில், நேற்று தை அமாவாசையை ஒட்டி, அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரை, திரளான பக்தர்கள் வந்து, தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்ன தாக, குளத்தில் நீராடி, இறந்த தங்கள் முன்னோரின் ஆத்மா சாந்தி அடைய திதி கொடுத்தனர். நேற்று விட்டு, விட்டு பெய்த மழையிலும் தயங்காது, தர்ப்பணம் கொடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar