Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈக்காடு பிடாரி வாளியம்மன் கோவிலில் ... சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் ரூ.20 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் அன்னதான திட்டம் விரிவுபடுத்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2017
12:01

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், தினமும் மதியம், 300 பக்தர்களுக்கு வழங்கும் அன்னதான திட்டத்தில், 500 நபர்களாக விரிவு படுத்த, கோவில் நிர்வாகம், ஆணையரிடம் அனுமதி கோரியுள்ளது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவர் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். பக்தர்களுக்கு மலைக்கோவிலில் தினமும், மதியம், 12:30 மணிக்கு, 300 பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2011 ஜூலை, 2ல், முருகன் கோவிலில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. அன்று முதல், இன்று வரை, அதே, 300 பக்தர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்படுகிறது. தற்போது, மதிய நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசிக்கின்றனர். இவர்கள், கோவில் அன்னதான திட்டத்தில், மதிய அன்ன தானத்திற்கு வரிசையில் நிற்கின்றனர். ஆனால், கோவில் நிர்வாகம், முதல் நிற்கும், 300 பேருக்கு மட்டும், அன்னதான டோக்கன் வழங்கி விட்டு, மீதமுள்ள பக்தர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

இதே, பழநி முருகன் கோவிலில், காலை, 11:00 மணி முதல் மாலை, 3:30 மணி வரை, தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால், திருத்தணி முருகன் கோவிலில், 300 பக்தர்களில் இருந்து, 1,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவிலில், தற்போது, 300 நபர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. இதை, 500 பக்தர்களுக்கு உயர்த்த வேண்டும் என, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு, பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். ஆணையரின் அனுமதி கிடைத்தவுடன், அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி, நபர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றார். கோவில் அன்னதான திட்டத்தில், மதிய அன்ன தானத்திற்கு வரிசையில் நிற்கின்றனர். தற்போது, 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதை, 500 பக்தர்களுக்கு உயர்த்த வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச்சென்றால், அபராதம் ... மேலும்
 
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar