Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் உலக நன்மைக்காக 108 ... ராகவேந்திரர் கோவிலில் மத்வ நவமி ஆராதனை விழா ராகவேந்திரர் கோவிலில் மத்வ நவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் குவியும் தைப்பூச பக்தர்கள் ரயிலுக்காக 8 மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் குவியும் தைப்பூச பக்தர்கள் ரயிலுக்காக 8 மணிநேரம் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
12:02

பழநி:தைப்பூச விழாவை முன்னிட்டு பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, ரயிலில் செல்ல எட்டுமணி நேரம் காத்து கிடக்கின்றனர்.பழநியில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை, சென்னை, திருச்செந்துாருக்கு இயக்கப்பட்ட ரயில்கள், தற்போது பாலக்காடு டவுன் பொள்ளாச்சில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் சாதாரண நாட்களிலும் ரயில்களில் இடம் கிடைக்காமல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எட்டுமணி நேரம் காத்திருப்பு:
பழநியில் இருந்து மதுரைக்கு காலை 7:50 மணிக்கு திருச்செந்துார் ரயில் மதுரை வழியாக இயக்கப்படுகிறது. அதன்பின் மாலை 4:30மணிக்கு தான் பயணிகள் ரயில் பழநியில் இருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது. தைப்பூச விழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வந்த வண்ணம் உள்ளனர். கட்டணம் குறைவு காரணமாக பக்தர்கள் ரயிலில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் காலை7:50மணி ரயிலை தவறவிடும் பக்தர்கள்8 மணிநேரம் காத்திருந்து பொள்ளாச்சி- மதுரை செல்லும் ரயிலை பிடிக்க வேண்டியுள்ளது. இதிலும் இடம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா: கடந்த தைப்பூச விழாவிற்கு பழநி- காரைக்குடி வரை சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே சார்பில் இயக்கப்பட்டது. இவ்வாண்டு தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்சேவை குறித்து அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் வெளியிடாமல் உள்ளது. இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. கடந்த ஆண்டைபோல சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே முன்வர வேண்டும்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ ரயில் இயக்க கோயில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். தைப்பூசம், அதற்கு முதல் நாள் மதுரை வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம், அல்லது கூடுதல் பெட்டிகள் இணைக்க வாய்ப்புஉள்ளது,”என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar