Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ ... ஆயந்தூர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூர் சத்திய ஞானசபையில் 9ம் தேதி தைப்பூசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
01:02

வடலுார்: வடலுார் சத்திய ஞானசபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆய்வு செய்தனர். கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 146வது தைப்பூச ஜோதி தரிசன விழா, வரும் 9ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, கடந்த ஏழு நாட்களாக தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதுதல், ஞான சபையில் திரு அருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது. வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி மற்றும் ஞானசபை ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடியேற்றப்படுகிறது.

9ம் தேதி தைப்பூசத்தன்று, காலை 6:00 மணி, 10:00, பகல் 1:00, இரவு 7:00, 10:00, 10ம் தேதி காலை 5:30 மணி என ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால், விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ராஜேஷ், எஸ்.பி., விஜயகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தரிசனம் காண வரும் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்குதல், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுதல், வி.ஐ.பி.,க்களை உள்ளே அனுமதிக்கும் வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அன்னதானம் நடைபெறும் இடங்களில் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், அன்னதானம் வழங்குவோர் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்துவதை கண்காணித்து தடை செய்யவும் உத்தரவிட்டனர். தைப்பூச பாதுகாப்பு பணிக்கு எஸ்.பி., தலைமையில் இரு கூடுதல் எஸ்.பி.,க்கள், 6 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 1,200 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினர் ஈடுபட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜருக்கு, வெளிநாட்டு பக்தர், ரூ. 25லட்சம் மதிப்புள்ள நவரத்தின ஆபரணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar