Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ ... ஆயந்தூர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூர் சத்திய ஞானசபையில் 9ம் தேதி தைப்பூசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
01:02

வடலுார்: வடலுார் சத்திய ஞானசபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆய்வு செய்தனர். கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 146வது தைப்பூச ஜோதி தரிசன விழா, வரும் 9ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, கடந்த ஏழு நாட்களாக தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதுதல், ஞான சபையில் திரு அருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது. வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி மற்றும் ஞானசபை ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடியேற்றப்படுகிறது.

9ம் தேதி தைப்பூசத்தன்று, காலை 6:00 மணி, 10:00, பகல் 1:00, இரவு 7:00, 10:00, 10ம் தேதி காலை 5:30 மணி என ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால், விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ராஜேஷ், எஸ்.பி., விஜயகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தரிசனம் காண வரும் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்குதல், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுதல், வி.ஐ.பி.,க்களை உள்ளே அனுமதிக்கும் வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அன்னதானம் நடைபெறும் இடங்களில் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், அன்னதானம் வழங்குவோர் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்துவதை கண்காணித்து தடை செய்யவும் உத்தரவிட்டனர். தைப்பூச பாதுகாப்பு பணிக்கு எஸ்.பி., தலைமையில் இரு கூடுதல் எஸ்.பி.,க்கள், 6 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 1,200 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினர் ஈடுபட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar