Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குடிமக்களைத் திருத்தும் ஜயா ஏகாதசி ... ஏடகநாதர் கோயிலில் பிப்.11ல் பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா ஏடகநாதர் கோயிலில் பிப்.11ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை, சமயபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை, சமயபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2017
11:02

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் நேற்று, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, 50 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் நடந்தன. நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 12ம் கால யாக பூஜை நடந்தது. 7:15 மணிக்கு, கலச புறப்பாடு நடந்தது. காலை, 9:25 மணிக்கு, ராஜகோபுரம் உள்ளிட்ட, ஒன்பது கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.காலை, 10:05 மணிக்கு, அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாலை, 4:30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மஹா அபிஷேகம், இரவு, 8:00 மணிக்கு திருக்கல்யாணம், தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடந்தது.

சமயபுரம் : பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்தன. 1ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கி, 3ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடந்தன.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன், 6ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு, புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 7:10 மணிக்கு மாரியம்மன் கோவில் தங்க விமானம், மேற்கு கோபுரம், வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள், பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.திரண்டிருந்த பக்தர்கள், பராசக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது, ஸ்பிரிங்க்ளர்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.மாலை, 4:00 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. - நமது நிருபர் குழு -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று துவங்கியது.திருமலையில், ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. வரும் ... மேலும்
 
temple news
கூடலூர்; கூடலூர் புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவிலில் ஆடி மாதத்தில் குடும்ப தோஷம் நீங்க , நடைபெற்ற ... மேலும்
 
temple news
வாசகர்களே! உங்கள் பகுதியில் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றிய சிறப்புகளை சேர்க்க இங்கே பதிவு செய்யுங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar