பதிவு செய்த நாள்
15
பிப்
2017
12:02
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, உற்சவர் ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், இலக்கியம்பட்டி செல்வ விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் குபேர கணபதி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை, அலங்காரம், அபிஷேகம் நடந்தது. இதேபோல், கிருஷ்ணகிரி சப்ஜெயில் ரோடு சித்தி விநாயகர் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.