பதிவு செய்த நாள்
22
பிப்
2017
02:02
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு,கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, உதவி ஆணையர் ராமசாமி தலைமையில், செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரர், ஆய்வாளர் கண்ணன், கணக்கர் அழகுபாண்டி முன்னிலையில் எண்ணப்பட்டது.
மு.வி.,பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனர். மொத்தம் ரூ.5 லட்சத்து 3 ஆயிரத்து 382 ரூபாயும், 142 கிராம் தங்கம், 262 கிராம் வெள்ளி, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர், அரபு நாட்டின் திராம்ஸ் என மொத்தம் 76 நோட்டு இருந்தது. ரூ.41 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பழைய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. கடந்த டிசம்பர் 15ம் தேதி கடைசியாக உண்டியல் எண்ணப்பட்டது. அதன் பிறகு, நேற்று மீண்டும் எண்ணப்பட்டது. 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, பழைய ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.