ராமநாதபுரம்: மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடக்கிறது. முருகனுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், விநாயகருக்கு ஆவணி சதுர்த்தி, அம்மனுக்கு ஆடிப்பூரம், சிவனுக்கு மாசி களரி எனும் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா பிப்., 24ல் நடக்கிறது.
கிராமங்களில் குல தெய்வ வழிபாட்டுக்கு பின் சிவராத்திரி விழா களைகட்டுவது வழக்கம். கருப்பணசுவாமி, முனியசாமி, அய்யனார், சுடலைமாடன், சோணையா உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி விடிய, விடிய அருள்வாக்கு கேட்பர். கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோயில்களில் சிவராத்திரி விழா நடக்கிறது. இதற்காக விரதம் துவக்கியுள்ள பக்தர்கள் கோயில்களில் உழவாரப்பணிகளை துவக்கியுள்ளனர்.