Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி ... தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா துவக்கம் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையானுக்கு ரூ.5 கோடி நகை : பிரார்த்தனையை நிறைவேற்றிய முதல்வர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2017
10:02

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள, திருப்பதி - திருமலை வெங்க டேஸ்வரா கோவிலுக்கு, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை காணிக்கையாக அளித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர், சந்திரசேகர ராவ், தெலுங்கானாவின் முதல்வராக உள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட பின், ஆந்திராவில் உள்ள திருப்பதி - திருமலை கோவிலுக்கு, நேற்று முதல் முறையாக அவர் வந்தார்.அப்போது, திருமலை வெங்கடேஸ்வரா கோவிலுக்கு, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, மாநில அரசு சார்பில், அவர் காணிக்கையாக செலுத்தினார். மொத்தம், 19 கிலோ எடையுள்ள, தங்கத்தால் செய்யப்பட்ட சாளிக்கிராம மாலை மற்றும், மகர காந்தாபரணம் எனப்படும் தங்க நெக்லஸ் ஆகியவற்றை அவர், கோவில் செயல் அலுவலர் சாம்பசிவராவிடம் ஒப்படைத்தார். நாடு சுதந்திரம் அடைந்த பின், ஒரு மாநில அரசு அளித்துள்ள மிகப் பெரிய காணிக்கை இது.கோவிலில் தரிசனம் செய்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுக்கு, கோவிலின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவே திருப்பதி வந்த அவர், நேற்று காலை, திருச்சானுார் பத்மாவதி கோவிலிலும் தரிசனம் செய்தார். பிரார்த்தனையை நிறைவேற்றவே கோவிலுக்கு வந்துள்ளேன், என, சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

Default Image
Next News

தொடரும் காணிக்கைகள் : தெலுங்கானா புதிய மாநிலம், 2014ல் உருவான பின், அதன் முதல் முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். அதன்பின், 2016 அக்டோபரில், வாரங்கலில் உள்ள பத்ரகாளி கோவிலுக்கு, 3.65 கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 கிலோ, 700 கிராம் எடையுள்ள தங்க கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார். திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு, தங்க கிரீடம், நெக்லஸ் ஆகியவற்றையும், விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு, தங்க மூக்குத்தியும் காணிக்கையாக அவர் செலுத்தினார்.

வேலை எங்கே? : தெலுங்கானாவில் உள்ள வேலைவாய்ப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தெலுங்கானா ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு சார்பில், தலைநகர் ஐதராபாத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு, ஏற்கனவே மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், குழுவின் தலைவர் எம்.கோதண்ட ராம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் சூழ்நிலையில், முதல்வர் சந்திரசேகர ராவ், கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காணிக்கைகளைசெலுத்துவது, போராட்ட குழுவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar