சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இன்று இரவில் கண்விழிக்கும் போது, இந்த வழிபாட்டை 108 முறை படியுங்கள். சகல வளமும் பெற்று வாழலாம்* கைலாய மலையை இருப்பிடமாக கொண்டவரே! மகாதேவரே! அபிஷேகப் பிரியரே! பார்வதியின் துணைவரே! தேவர்களால் வணங்கப்படுபவரே!ருத்ரமூர்த்தியே! மங்கள வடிவானவரே! வேதங்களால் பூஜிக்கப்படுபவரே! திரிபுரஅசுரர்களை எரித்தவரே! தாயுமானவரே! எங்களின் விருப்பத்தை விரைவில் நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்.* அம்மையப்பரே! சூரிய, சந்திரரை கண்களாக உடையவரே! நெற்றிக்கண் கொண்டவரே! பாம்பை ஆபரணமாக அணிந்தவரே! தேவிக்கு இடபாகம் தந்தவரே! காளை வாகனத்தில் பவனி வருபவரே! திரிசூலம் ஏந்தியவரே! புலித்தோல் ஆடை உடுத்தியவரே!ஐந்தெழுத்து மந்திர நாயகரே! யோகத்தில் ஆழ்ந்திருப்பவரே! எங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைத்திருக்க வரம் தருவீராக.* காலனின் கர்வத்தை அடக்கியவரே! மன்மதனை எரித்தவரே! பிறவிக்கடலில் இருந்து கரை சேர்ப்பவரே! ஆனந்த நடனம் ஆடுபவரே! கங்கையைத் தலையில் தாங்கியவரே! நீலகண்டரே! உடுக்கை ஏந்தியவரே! பயத்தைப் போக்குபவரே!பஞ்ச பூதங்களின் வடிவானவரே! மகேஸ்வரரே! கருணை வள்ளலே! திருவிளையாடல் புரிவதில் வல்லவரே! பிட்டுக்காக மண் சுமந்தவரே! நாங்கள் அனைவரும் நீண்ட ஆயுள், உடல்நலம் பெற அருள்வீராக.* பிறையைத் தலையில் சூடியவரே! மேரு மலையை வில்லாக வளைத்தவரே! விஷத்தை கழுத்தில் தாங்கியவரே! கோடி சூரியனுக்கு இணையான ஒளி கொண்டவரே! கற்பகம் போல கேட்ட வரம் தருபவரே! நம்பியவரைக் கரை சேர்ப்பவரே! இந்த உலகம் நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.