Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி யாத்திரைக்கு முன்பதிவு ... சதுரகிரி மலையில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஸ்திவாரம் தோண்டியபோது பாகூரில் சாமி சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
12:02

பாகூர்: பாகூரில் கட்டுமான பணிக்கான அஸ்திவாரம் தோண்டியபோது, பழமை வாய்ந்த சாமி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகூரை சேர்ந்தவர் தில்லைவாணன். ஆசிரியர். பாகூர் அக்ரஹார வீதியில், இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமான பணி மேற்கொள்ள ஜெ.சி.பி., மூலம் பள்ளம் தோண்டும் போது, சுமார் 6 அடி ஆழத்தில் கருங்கல் ஒன்று தென்பட்டுள்ளது. பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தி விட்டு, அந்த கல்லின் மீது இருந்த மண் குவியலை சுத்தம் செய்து பார்த்தபோது, சாமி சிலை என்பது தெரிய வந்தது.  சாமி சிலை கிடைத்திருப்பது குறித்து அப்பகுதியில் செய்தி பரவியதால், ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதனிடையே, இது குறித்து தகவலறிந்த பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு சென்று, மண்ணில் புதைந்து கிடந்த சிலையை ஆய்வு செய்தார். அதில், அந்த சிலை ஆறரை அடி நீளமும் சிலையின் தலைப்பகுதியில் உள்ள கிரீடத்தின் வடிவமைப்பு வைணவ கடவுளுக்கு இருப்பது போல் அமைந்துள்ளது. சிலை குறித்து முழுமையான தகவல்கள் தெரியவில்லை.

இது குறித்து தாசில்தார் கார்த்திகேயன் கூறுகையில் சிலையின் வடிவமைப்பை வைத்து பார்க்கையில் அது பெருமாள் சிலையாக இருக்கலாம். மேற்கொண்டு அந்த இடத்தில் பள்ளம் தோண்டினால், சிலை சேதமாக வாய்ப்புள்ளது என்பதால், பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சிலையுடன் வேறு சில சிலைகளும் இருக்க வாய்ப்புள்ளதால், அதனை வெளியில் எடுப்பதில் சிக்கல் உள்ளது. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை தொல்லியல் துறை அதிகாரிகள், புதைந்து கிடக்கும் சிலையை வெளியில் எடுத்து ஆய்வு பணியில் ஈடுபடுவர் என எதிர்பார்கிறோம் என்றார்.

தொல்லியல் துறை களம் இறங்குமா?

கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் வயல் பகுதியை சீரமைக்கும் பணியின் போது, 5 அடி உயரம் உள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுவரை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபடவில்லை. இந்நிலையில், பாகூரில் கண்டுபிடிக்கப்பட்ட சாமி சிலை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் எப்போது ஆய்வு பணியை மேற்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar