Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி யாத்திரைக்கு முன்பதிவு ... சதுரகிரி மலையில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஸ்திவாரம் தோண்டியபோது பாகூரில் சாமி சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
12:02

பாகூர்: பாகூரில் கட்டுமான பணிக்கான அஸ்திவாரம் தோண்டியபோது, பழமை வாய்ந்த சாமி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகூரை சேர்ந்தவர் தில்லைவாணன். ஆசிரியர். பாகூர் அக்ரஹார வீதியில், இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமான பணி மேற்கொள்ள ஜெ.சி.பி., மூலம் பள்ளம் தோண்டும் போது, சுமார் 6 அடி ஆழத்தில் கருங்கல் ஒன்று தென்பட்டுள்ளது. பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தி விட்டு, அந்த கல்லின் மீது இருந்த மண் குவியலை சுத்தம் செய்து பார்த்தபோது, சாமி சிலை என்பது தெரிய வந்தது.  சாமி சிலை கிடைத்திருப்பது குறித்து அப்பகுதியில் செய்தி பரவியதால், ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதனிடையே, இது குறித்து தகவலறிந்த பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு சென்று, மண்ணில் புதைந்து கிடந்த சிலையை ஆய்வு செய்தார். அதில், அந்த சிலை ஆறரை அடி நீளமும் சிலையின் தலைப்பகுதியில் உள்ள கிரீடத்தின் வடிவமைப்பு வைணவ கடவுளுக்கு இருப்பது போல் அமைந்துள்ளது. சிலை குறித்து முழுமையான தகவல்கள் தெரியவில்லை.

இது குறித்து தாசில்தார் கார்த்திகேயன் கூறுகையில் சிலையின் வடிவமைப்பை வைத்து பார்க்கையில் அது பெருமாள் சிலையாக இருக்கலாம். மேற்கொண்டு அந்த இடத்தில் பள்ளம் தோண்டினால், சிலை சேதமாக வாய்ப்புள்ளது என்பதால், பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சிலையுடன் வேறு சில சிலைகளும் இருக்க வாய்ப்புள்ளதால், அதனை வெளியில் எடுப்பதில் சிக்கல் உள்ளது. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை தொல்லியல் துறை அதிகாரிகள், புதைந்து கிடக்கும் சிலையை வெளியில் எடுத்து ஆய்வு பணியில் ஈடுபடுவர் என எதிர்பார்கிறோம் என்றார்.

தொல்லியல் துறை களம் இறங்குமா?

கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் வயல் பகுதியை சீரமைக்கும் பணியின் போது, 5 அடி உயரம் உள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுவரை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபடவில்லை. இந்நிலையில், பாகூரில் கண்டுபிடிக்கப்பட்ட சாமி சிலை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் எப்போது ஆய்வு பணியை மேற்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar