Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடைக்கானலில் அந்தோணியார் திருவிழா திருத்தணி முருகன் கோவிலில் வரும் 1ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயான கொள்ளை திருவிழா: காஞ்சியில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
12:02

காஞ்சிபுரத்தில், மயானக்கொள்ளை திருவிழா நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். ஆண்டு தோறும், மாசி மாதம் அமாவாசை அன்று பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடப்பது வழக்கம். இதற்காக, பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த அலகு குத்தியும், பல்வேறு வேடமிட்டும் மயானம் வரை நடந்து செல்வர். இந்த விழாவில், நேற்று மதியத்தில் இருந்து பக்தர்கள், பல வேடங்களிட்டு கம்மாளத்தெரு, செங்கழுநீரோடை, கிழக்கு ராஜவீதி, இந்திரா சாலை போன்ற வழிகளில், ஊர்வலமாக சென்றனர். காளி வேடமிட்டு சென்றவர்கள் காலில் விழுந்து குழந்தைகள், முதியோர் ஆசிபெற்றனர். பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 6:00 மணிக்கு தாயார் அம்மன் ஊர்வலம், வெள்ளக்குளம் பழைய ரயில் நிலையம் இடுகாட்டில் நிறைவு பெற்றது. இந்த விழாவிற்காக நேற்று, செங்கழுநீரேடை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

வாலாஜாபாத்: மயானக்கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு, 24ம் தேதி காலை 7:15 மணிக்கு, கோவிலில், கொடியேற்றும் விழா துவங்கியது. கடந்த, 25ம் தேதி இரவு, 7:30 மணிக்கு அம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந் தருளி, கரகத்துடன் வீதியுலா வந்தார். இறுதி நாளாக, நேற்று பகல், 3:00 மணியளவில், சிம்ம வாகனத்தின் மீது அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மயான கொள்ளை உற்சவத்திற்கு புறப்பட்டு சென்றார். வாகனங்களை கயிறுகளாலும், சங்கிலியை உடம்பில் சொருகி இழுப்பது, காளி வேடம் அணிவது, விளைச்சல் பொருட்களை சூறையிடுவது உள்ளிட்ட வேண்டுதல்கள், பக்தர்களால் நிறைவேற்றப்பட்டன. பின், சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அங்காள பரமேஸ்வரியின் முன், மயான கொள்ளை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.  விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.  - நமது நிருபர் குழு -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar