Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அம்மையார்குப்பத்தில் தேர் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத்தூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2017
12:03

திருத்தணி:கிராம தேவதையான மத்துாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், 1,000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில் கிராம தேவதையாக விளக்கும் மத்துாரம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

தீபாராதனை: கோவில் வளாகத்தில் ஐந்து யாகசாலைகள், 250 கலசங்கள் வைத்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, விசேஷ சாந்தி, கலச ஸ்தாபனம் மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9:00 மணிக்கு, கலச ஊர்வலமும், காலை, 10:00 புதியதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரம் மற்றும் விமானத்தின் மீது, கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிற்பகல், 11:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

அலங்காரம்: மாலை 6:00 மணிக்கு, பரத நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் மத்துாரம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழாவில், காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமி, அரக்கோணம் எம்.பி., அரி, முருகன் கோவில் தக்கார் ஜெய்சங்கர், உட்பட திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சில பெண் பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar