Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பில்லாத பாளையக்காரர்கள் ... திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம் : விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணத்தில் மாசிமக தீர்த்தவாரி: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2017
01:03

கும்பகோணம்: மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, கும்பகோணம் மகாமக குளத்தில் அதிகாலை முதல், பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

Default Image
Next News

வடக்கே கும்பமேளா போல், தெற்கே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது மகாமக திருவிழா. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், மக நட்சத்திரத்தின் போது, மாசி மக பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கும்பகோணத்தில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவில்களிலும், பெருமாள் கோவில்களிலும் வெகு விமரிசையாக மாசி மக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய கோவில்களில் மாசி மக திருவிழாவுக்காக கடந்த, 2ம் தேதி கொடியேற்றப்பட்டு, 10 நாள் பிரமோற்சவ விழா துவங்கியது.

விழாவை முன்னிட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாசி மக திருவிழாவின் முக்கிய திருவிழாவான தீர்த்தவாரி, மகா மக குளத்தில் நடந்தது. அஸ்திரதேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்காக  அதிகாலை, 4:00 மணி முதல், வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மகா மக குளத்தின் கரைகளில், தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடினர். பின்னர் மகா மக குளத்தின் நான்கு கரைகளில் உள்ள, 16 சோடச லிங்கங்களையும் வழிபட்டனர். தீர்த்தவாரி நேரத்தில், மகா மக குளக்கரையில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar